Oct 20, 2016

சொர்க்கம் வானத்தில் இல்லை

சொர்க்கம் வானத்தில் இல்லை


கேட்கப்பட்ட ஏழு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்தக் கேள்வியைப் பரப்பியவர்கள் நாம் விளக்கம் அளித்த பின் இரண்டில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பீஜே அளித்த விளக்கம் இந்தக் காரணத்தால் சரியில்லை என்று கூற வேண்டும்.

அல்லது நான் தவறான தகவலைக் கூறி விட்டேன்தவறான கேள்வியை கேட்டு விட்டேன் என்று பரப்ப வேண்டும்.

இரண்டில் எதையும் செய்யாத இவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று நேயர்கள் சிந்திக்க வேண்டும்.

அடுத்ததாக இவர்கள் கேட்கும் எட்டாவது கேள்வியைப் பார்ப்போம்.
8. "சுவர்க்கம் வானத்தில் இல்லைஅது பூமியில் படைக்கப்படும்" என்று தனது திருகுர்ஆன் மொழிபெயர்ப்பில் பெரியவர் பிஜே எழுதியதற்கான ஆதாரம் என்ன?. இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த வரிகளைஇறைவாக்கின் மொழிபெயர்ப்பில் கூறும் அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைகளில் கவனமில்லாதவரா பிஜே?

என்று எட்டாவது கேள்வியைப் பரப்பினார்கள். இந்தக் கேள்வியில் பல விஷயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

சொர்க்கம் பற்றி நாம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை. அதை விளக்குவதற்கு முன்னால் இக்கேள்வியில் உள்ள அபத்தங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

சொர்க்கம் பற்றி பீஜே தவறாக எழுதி விட்டார்இந்த அளவுக்கு அவர் கவனமில்லாதவரா?

என்ற கேள்வியை முதலில் எடுத்துக் கொள்வோம். பீஜே எழுதியது தவறு என்றே வைத்துக் கொள்வோம்.
இந்தக் கேள்வியின் மூலம் கேள்வி கேட்டவர் இஸ்லாத்தின் அடிப்படையை முதலில் தகர்த்து விடுகிறார். பீஜே போன்ற பெரியவர்களூக்கு கவனமின்மையால் தவறு ஏற்படாது என்பது இதன் உள் கருத்தாக இருக்கிறது.

அல்லாஹ்வைத் தவிர யாராக இருந்தாலும் கவனமின்மை ஏற்படும் என்பதும் கவனமின்மையால் தவறு ஏற்படும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இந்தக் அடிப்படைக் கொள்கையை பீஜே மீது கொண்ட வெறுப்பின் காரணமாக இவர் மறுக்கத் துணிந்ததால் தான் இப்படிக் கேட்டுள்ளார்.

மற்ற இயக்கத்தின் தவறுகளையும் மற்ற தலைவர்களின் தவறுகளையும் யாராவது விமர்சனம் செய்தால் உடனே இந்தக் கள்ளப்பேர்வழி முட்டுக் கொடுப்பார். மனிதன் தவறு செய்பவன் தான். அதற்காக இப்படியெல்லாம் விமர்சிக்காலாமா என்று முட்டுக் கொடுத்தவருக்கு இப்படி எழுத முடிகிறது என்றால் உடம்பெல்லாம் விஷம் என்பது புரிகிறதா?

பீஜே போன்றவருக்கு கவனமின்மை ஏற்படாது என்பது இவரது கொள்கையாஎந்தத் தகுதியில் உள்ளவருக்கு கவனக் குறைவு ஏற்படாது என்பதற்கு ஏதாவது அளவு கோல் வைத்துள்ளாராஅந்த அள்வு கோல் என்னஅல்லது பீஜேயோ தவ்ஹீத் ஜமாஅத்தோ பீஜியிடம் தவறு ஏற்படாது என்று கூறியுள்ளார்களா?

நான் கவனக் குறைவாக எழுதி விட்டேன் என்று பீஜே பதில் சொன்னால் அதை மக்கள் நம்பக் கூடாது எந்தற்காகவும் இப்படி இவர் எழுதி இருக்கிறார். இவரைப் போன்றவருக்கு எந்தக் கொள்கையும் கிடையாதுபீஜே என்ற தனி மனிதனைத் தாக்க வேண்டும். இஸ்லாத்தைக் காவு கொடுத்தால் தான் அது முடியும் என்றால் அதற்கும் இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

சொர்க்கம் பூமியில் படைக்கப்படும் என்று பீஜே எழுதியதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்த்து விட்டார் என்று கள்ளப்பேர்வழி கூறுகிறார். இஸ்லத்தின் அடிப்படையை பீஜே தகர்த்து விட்டார் என்றால் இதன் மூலம் இஸ்லாத்தின் எந்த அடிப்படை தகர்க்கப்பட்டது என்று கூற வேண்டுமல்லவாஅடிப்படையைத் தகர்த்து விட்டார் என்று பாரதூரமான குற்றச் சாட்டைக் கூறுபவர் எந்த அடிப்படை தகர்க்கப்படுகிறது என்று ஒன்றுமே சொல்லவில்லை. இவர் அவ்வப்போது தன்னை மேதாவியாகக் காட்டிக் கொண்டு உளறிக்கொட்டுவது எவ்வாறு அபத்தனாக இருக்குமோ அது போல் தான் இந்தக் குற்றச் சாட்டும் உள்ளது. ஆய்வு செய்து இப்படி கூறுபவர் என்றால் அதற்கான காரண காரியங்களௌடன் கூறியிருப்பார். யாராவது எழுதியதையும் பேசியதையும் கேட்டு சிந்திக்காமல் கேள்வி கேட்டதால் வாயில் வந்தபடி எழுதியுள்ளார் என்று தெரிகிறது.

இவருக்கு எதிராக நான் கடுமையான விமர்சனம் செய்தது இவரது கேள்விகள் முழுவதும் ஒளிந்திருந்த இந்த விஷமக் கருத்துக்காகத் தான்.

அடுத்து சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்று பீஜெ எழுதியது சரியா?

நிச்சயம் சரி தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும் இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது என்ற காரணத்தினால் நமது கூற்றை சிலர் மறுக்கின்றனர்.

உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும்பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் முன்னரே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இதற்கு முரணாக பீஜே எழுதி உள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த ஆதாரங்களில் எதையும் பீஜே மறுக்கவில்லை. இது குறித்து பீஜெயே தனது தமிழாக்கத்தின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்.

ஸித்ரதுல் முன்தஹா அருகில் தான் சொர்க்கத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) கண்டனர்- 53:15 330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம் 
ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 36:26) 

இதனுள் அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே உடனே அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார்கள் என்பதும் இவ்வசனம் கூறும் கருத்து. 

கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்றெல்லாம் நாம் நம்புகிறோம். இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்து பறவை வடிவத்தில் தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் விளக்கி உள்ளனர்.

சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டு உள்ளது என்பதை பீஜேயும் எழுதியுள்ளார் என்பதை மேற்கணட் அவரது எழுத்தில் இருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்தது உண்மை தான். அதில் பீஜேக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உலகம் அழிக்கப்படும் போது வானம் பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும். சொர்க்கம் நரகமும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்று கூறுவது சொர்க்கம் குறித்து மேற்கண்ட வசனங்களை மறுத்ததாக ஆகாது.

இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வின் வழிமுறையே இது தான்.
உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர்,நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும்துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 10:4

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும்மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:34

நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையாஅல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனாவானத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனாஅல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 27:64

அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில் லையாபின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
திருக்குர்ஆன் 29:19

அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 3011

அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும்பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்ஞானமுடையவன்.
திருக்குர்ஆன் 30:27

அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
திருக்குர்ஆன் 85:13
இந்த வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்! படைக்கப்பட்ட பொருட்களை அழிப்பதும்அழித்ததை மீண்டும் படைப்பதும் இறைவன் என்பதற்கான ஆதாரமாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இப்படி என்னைத் தவிர யாராலும் செய்ய முடியுமா என்று அறை கூவல் விடுவதில் இருந்து இதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு வானங்களுக்கும் சென்றார்கள் என்று ஹதீஸ் உள்ளதால் வானம் அழியாது என்று யாராவது கூற முடியுமா?

முதலில் எப்படி எதுவும் இல்லாமல் இருந்ததோ அது போன்ற நிலையை உலகம் அடையும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அல்லாஹ் படைப்பான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறவில்லையாஇதில் சொர்க்கம் மட்டும் விதி விலக்கு என்று ஆதாரம் எதையும் நாம் காணவில்லை. எனவே தான் ஏற்கனவே சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தாலும் அந்த சொர்க்கம் அழிக்கப்பட்டு வேறு சொர்க்கம் படைக்கப்படும்அந்த சொர்க்கத்துக்குத் தான் சொர்க்கவாதிகள் செல்வார்கள் என்று கூறுகிறோம். இது தான் சரியான கருத்தாகும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சொர்க்கத்தைப் பார்த்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. உலகம் அழியும் போது வானம் என்னவாகும்இது பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!

அந்நாளில் பூமிவேறு பூமியாகவும்வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில்முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 11 21;104

உலகம் அழிக்கப்படும் போது வானம் வேறு வானமாகவும் பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்றால் அவை அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் வானத்தில் இருந்த சொர்க்கமும் அழிந்து விடும் என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.

இன்னும் சொல்லப் போனால் வானத்தில் இருந்த சொர்க்கத்தை விட மிகப் பிரம்மாண்டமானதாக சொர்க்கம் இருக்கும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும்வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
திருக்குர் ஆன் 3:133

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும்சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும்,அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதைதான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
திருக்குர் ஆன் 57:21

வானத்தில் இருந்த சொர்க்கம் வேறுவானத்தையும் பூமியையும் உள்ளடக்கும் அளவிலான் சொர்க்கம் வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.

உலகம் அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். எங்கிருந்து எழுப்பப்படுவார்க்ள்இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
திருக்குர்ஆன்20;55

பூமியில் இருந்து தான் மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளது. மேலே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாம் அறிந்தவரை எந்த ஆதாரத்தையும் காணவில்லை.

இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது வானம் பூமிசொர்க்கம் நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். என்பதும்அழிக்கப்பட்ட பின் வானம் வேறு வானமாகவும் பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்பதும் மனிதர்கள் பூமியில் இருந்து எழுப்பப்படுவதால் அங்கு தான் சொர்க்கம் அமைக்கப்படும் என்பதும்அந்த பூமி வானம் பூமியை விட மிகப் பிரும்மாண்டமாக இருக்கும் என்பதும் தெரிகிறது.

சொர்க்கம் நரகம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர் என்றாலும் நாம் கூறி இருப்பதர்கு எதிராக உரிய ஆதாரம் இல்லை என்பதால் இதையே சரியானது என்கிறோம். இதில் இஸ்லாத்தின் எந்த அடிப்படையும் மீறப்படவில்லை


இந்தக் கட்டுரை வெளியான பின் சகோதரர் மவலவி அப்துன்னாஸர் அவர்கள் மற்றொரு கோணத்தில் எழுதி அனுப்பிய கட்டுரையை கீழே தருகிறோம்

சொர்க்கம் நரகம் பூமியில்தான் அமைக்கப்படும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள்

நாம் மலைகளை இடம் பெயரச் செய்யும் நாளில் பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்!அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களைநாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தைஉங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்). (அல்குர்ஆன்18 : 4748)
(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ''என் இறைவன்அவற்றைத் தூள்தூளாக்கு வான்'' என்று கூறுவீராக! பின்னர் அதை வெட்ட வெளிப்பொட்டலாக ஆக்குவான்.  அதில் மேடு பள்ளத்தைக் காண மாட்டீர்! எவ்விதமறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்றஅருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும்நீர் செவியுற மாட்டீர்! (அல்குர்ஆன் 20 : 105லி108)

மேற்கண்ட இரண்டு வசனங்களும் மறுமையில் பூமி மேடுபள்ளம் எதுவுமில்லாத வெட்டவெளிப் பொட்டலாக மாற்றப்படும் என்றும் அதில் தான் மக்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்என்றும் தெளிவாக அறிவிக்கின்றது.
மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவதற்காகத்தான் அல்லாஹ் பூமியைவெட்டவெளியாக ஆக்குகின்றான்.

முதலாவது சூர் ஊதப்படும் போது வானங்கள்பூமி அனைத்தும் அழிந்து விடும் . வானம்,பூமியிலுள்ள அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். பிறகுதான் அல்லாஹ் பூமியைமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கு தோதுவாக வெட்ட வெளியாகமாற்றுவான். இதனை பின்வரும் திருமறை வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் இருப்போர்மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒருமுறை அது ஊதப்படும். உடனே அவர்கள்எழுந்து பார்ப்பார்கள். பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்.

(பதிவுப்) புத்தகம்(முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சி கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 40 ; 6869)
இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் பூமி தன்னுடைய ஒளியால் பிரகாசிக்கும் என்றுஅல்லாஹ் கூறுகிறான். அதைத் தொடர்ந்து பதிவுப் புத்தகம் வைக்கப்ட்டு சாட்சிகள்விசாரிக்கப்படும் என்று இறைவன் கூறுவதிலிருந்தே பூமியில் ஒன்று கூட்டப்படுவதும்விசாரணையும் நடைபெறும் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது.

மேலும் பின்வரும் வசனங்களும் மக்கள் அனைவரும் பூமியல்தான் மீண்டும் ஒன்றுதிரட்டப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதிலிருந்து உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச்செய்வோம். மற்றொருதடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம். (அல்குர்ஆன் 20:55)

''அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தேவெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான் 
(அல்குர்ஆன் 7:25)

அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.. பின்னர் அதிலேயேஉங்களை மீட்டுவான். (அதிலிருந்தே) உங்களை வெளியேற்றுவான். 
(அல்குர்ஆன் 71:17,18)

அவனது கட்டளைப்படி வானமும்பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில்உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போதுபூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். 
(அல்குர்ஆன் 30 : 25)

(அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின்பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள்மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள். அழைப்பாளரை நோக்கி விரைவார்கள்.இது கஷ்டமான நாள்தான் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 54:6,7,8)

பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும் போது,  தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போதுஇதற்கு என்ன நேர்ந்ததுஎன்று மனிதன் கேட்கும் போதுஅந்நாளில் தனது இறைவன்இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும். அந்நாளில் மக்கள் தமதுசெயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மைசெய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன்99 ; 1லி8)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து மக்கள் மாற்றப்பட்ட பூமியில்தான் ஒன்றுதிரட்டப்பட்டுவிசாரணை நடைபெறும் என்பது தெளிவாக விளங்குகிறது.
எங்கு மக்கள் ஒன்று திரடப்படுவார்களோஎங்கு விசாரணை நடைபெறுமோ அங்குதான்சொர்க்கம் நரகம் இருக்கும் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் ''அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக்காண்போமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம்ன கேட்டார்கள். அப்போது நபி அவர்கள்''மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?'' என்றுகேட்டார்கள். மக்கள் ''இல்லைஅல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ''பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலவைக் காண்பதில்உங்களுக்குச் சிரமம் உண்டா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''(சிரமம்) இல்லை;அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்மனிதர்களை (மறுமை மன்றத்தில் அதாவது மாற்றப்பட்ட பூமியல்) ) ஒன்று கூட்டி ''யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின் தொடர்ந்து செல்லட்டும்''என்பான். ஆகவேசூரியனை வணங்கிக்கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்துசெல்வார்கள். சந்திரனை வணங்கிக்கொண்டிருந்தவர்கள் (அதைப்) பின்தொடர்ந்துசெல்வார்கள். ஷைத்தான்களை வணங்கிக்கொண்டிருந்த வர்கள் (அவற்றைப்) பின்பற்றிச்செல்வார்கள்.
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையேநயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன்அவர்கள் அறியாத தோற்றத்தில்அவர்களிடம் வந்து ''நான்தான் உங்கள் இறைவன்'' என்பான். உடனே அவர்கள்''உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள்இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள்  இறைவன்எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்'' என்பர். அப்போது இறைவன்அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து ''நானே உங்கள் இறைவன்'' என்பான்.அதற்கு அவர்கள் ''நீயே எங்கள் இறைவன்'' என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்துசெல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்)கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள்.அனைவரின் பிரார்த்தனையும் 'அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்றுஎன்பதாகவேஇருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின்முற்களைப் போன்றிருக்கும். ''கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்த தில்லையா?'' என்றுகேட்டார்கள். மக்கள் ''ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!'' என்றுபதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள்கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும்அதன் பருமனைஅல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள்மக்களை அவர்களின் செயல் களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறைமறுப்புஉள்ளிட்ட) தன் (தீய) செயல் களால் அழிந்துபோனவரும் இருப்பார்.

(இறைநம்பிக்கைஇருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக்கொள்பவரும்இருப்பார். இறுதி யாக இறைவன்தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின்,வணக்கத்திற் குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்று உறுதிகூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான்.அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணை யிடுவான்.வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனம்கண்டுகொள்வார்கள்.

(ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்குமனிதனை அவனிலுள்ளசஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே,வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்று வார்கள்.

அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவேஅவர்கள் மீது'மாஉல் ஹயாத்எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில்விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்.அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர்மட்டும் எஞ்சுவார். அவர் ''என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்குமூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவேநரகத்தை விட்டுஎன் முகத்தை (வேறு பக்கம்) திருப்பி விடுவாயாக!'' என்று அல்லாஹ்விடம்பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார்.  அப்போது அல்லாஹ் ''(உன் கோரிக்கையை ஏற்று)இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம்அல்லவா?'' என்று கேட்பான். அதற்கு அவர் ''இல்லைஉன் கண்ணியத்தின் மீதாணையாக!வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்'' என்பார். ஆகவேஇறைவன் அவரதுமுகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அதற்குப் பிறகு ''என்இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக!'' என்பார் அவர்.அதற்கு இறைவன் ''வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா?

மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!'' என்பான்.ஆனால்அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் ''நீகேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்''என்பான். அதற்கு அவர் ''இல்லைஉன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல்லாதவேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்'' என்று சொல்லிவிட்டுவாக்குறுதிகளையும்உறுதிமொழி களையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.

இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான்.சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரைமௌனமாக இருப்பார். பிறகு ''இறைவா! என்னை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!'' என்றுகூறுவார். பின்னர் இறைவன் ''வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீசொல்லவில்லையாமனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலை தான் என்ன!''என்று கேட்பான். அதற்கு ''என் இறைவா! என்னை உன் படைப்புகளி லேயேநற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!'' என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்திக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில்நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான். சொர்கத்திற்குள் அவர் நுழைந்தபின்,
''நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்'' என்று சொல்லப்படும். அவ்வாறேஅவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) ''நீ (விரும்பிய) இன்னதை ஆசைப் படலாம்''என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரைஆசைப்பட்டு (தன் விருப்பங் களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போதுஇறைவன் ''இது உனக்குக் கிடைக்கும்இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக்கிடைக்கும்'' என்பான். இந்த மனிதர்தாம்சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: 
 (புகாரி 6574)

எனவே பூமியில் தான் சொர்க்கம் நரகம் அமைக்கப்படும் என்பது தெளிவாகிறது. ஆனால்நாம் இப்போது வசிக்கின்ற பூமியைப் போன்று இருக்காது 


Source: www.onlinepj.com