Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்-மலக்குமார்களின் தோற்றம்

மலக்குமார்களை நம்புதல்

மலக்குமார்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவார்கள். அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடக் கூடியவர்கள்.

21:19

21:20

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பக­லும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள்.

(அல் குர்ஆன் 21 :19,20)

தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள்.

(அல் குர்ஆன் 66 :6)

மலக்குமார்களுக்கு இறை தன்மையோ மனிதத் தன்மையோ கிடையாது. அவர்கள் இறைவனின் பிள்ளைகளும் கிடையாது.

மலக்குமார்களின் தோற்றம்

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ர­லி), நூல் : முஸ்லிம் (5314)

35:1

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 35:1)

நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ர­லி), நூல் : புகாரீ (4857)

மலக்குமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைப்படி மனித உருவிலும் வருவார்கள்.