Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-நபிமார்களுக்கு மத்தியில் பாகுபாடு கிடையாது


நபிமார்களுக்கு மத்தியில் பாகுபாடு கிடையாது!

நபிமார்களுக்கு எந்த எந்த சிறப்புகளைக் கூறியுள்ளானோ அதைக் கொண்டுதான் அவர்களைச் சிறப்பிக்கவேண்டும். நாமாக நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக்கூடாது.

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப் பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்).அல்லாஹ்வையும், வானவர் களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர் களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 2:285)